Maatram

போருக்கு தயாராகிறது சீனா: ராகுல் காந்தி

‘இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது; ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களை நிறைவு செய்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது: பாஜகவுக்கு எதிராக துணிவுடன் எதிா்த்துப் போராட முடியவில்லை என்று கருதுபவா்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கு எவ்விதத் தடையுமில்லை. அவா்கள் ஊழல் […]

மொராக்கோவை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நள்ளிவு 12.30 மணிக்கு டோஹாவின் அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற 2வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணியானது, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணியை எதிர்கொண்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி மீதும், நடப்பு சம்பியனான பிரான்ஸ் மீதும் சமமான எதிர்ப்பார்ப்பு […]

நீண்ட இழுபறிக்குப் பின்னர் இமாச்சலில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இங்குள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக மூத்த […]

இனி நடிக்க மாட்டேன்: அமைச்சராக பதவியேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மாமன்னன் தான் தனக்குக் கடைசிப் படம் என்றும் விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அனைவரின் ஒத்துழைப்புடன் […]

உக்ரைனிற்கு பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்க தயாராகிறது அமெரிக்கா!

ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு இன்னும் வலுவான ஆயுதங்களை விரும்பும் உக்ரைனின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, அதன் அதிநவீன பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா இறுதி செய்து வருகிறது. அமெரிக்கா நாளை வியாழன் அளவில் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை வழங்குவது பற்றிய முடிவை அறிவிக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்கள் செவ்வாயன்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அமெரிக்க பாதுகாப்பு […]

புதிய பங்காளிகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்: புடின்

மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, கிழக்கு அண்டை நாடுகளுக்கு எரிவாயு பாய்ச்சலை மாற்றுவது உட்பட, புதிய பங்காளிகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை ரஷ்யா விரிவுபடுத்தும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகளை முறியடிக்க ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பங்காளிகளுடன் பொருளாதார உறவுகளை வளர்த்துக்கொள்ளும் என்று புடின் தொலைக்காட்சி உரையில் கூறினார். “தளவாடங்கள் மற்றும் நிதித்துறையில் உள்ள கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்குவோம். பொருளாதாரத் தடைகளை […]

தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றாலும் தமிழ் தேசிய கூட்டமை ப்பாகவே செயற்படுவோம்: பங்காளிக்கட்சிகள் அறிவிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிக ஆசனத்தை […]

கோட்டா பீதியடையாமல் இன்னும் சில நாள் சமாளித்திருந்தால் பிரச்சினையை தீர்த்திருக்கலாம்: பசில்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, […]