Maatram

கிளிநொச்சி மதுபானசாலை விவகாரம்; சிக்கினார் விக்னேஸ்வரன்!

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக்கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ரணில் அரசில் பல தமிழ் எம்.பிக்களும் மதுபானச்சாலை உரிமம் பெற்றதாக தகவல் வெளியானது. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி. ரெலோ உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டு […]

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து, டிக்ளேர் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 2 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது. இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தனது 13வது இன்னிங்ஸில் ஐந்தாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களை பெற்றிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார். டினேஸ் சந்திமால் 116 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். நியூசிலாந்து […]

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மரணம் ; யார் இந்த ஹசன் நஸ்ரல்லா

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்த போவதில்லை என்று ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய சில நிமிடங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்திருக்கிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? எதற்காக இஸ்ரேல், இவரை கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணத்தை நாம் இங்கு பார்ப்போம். […]

ரஷியா – வட கொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்

வட கொரியா சென்றுள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாடுகளில் எந்த நாடு தாக்கப்பட்டாலும், இன்னொரு நாடு உதவுவதற்கு உறுதியளிக்கும் அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது மேற்கத்திய நாடுகளுக்குக் கவலையளிக்கக் கூடியது என்று கருதப்படுகிறது. இது குறித்து தலைநகா் பியோங்கியாங்கில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் விளாதிமீா் புதின் கூறியதாவது: ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய […]

ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல்: தீவிர வலதுசாரி கட்சிகள் முன்னேற்றம்

720 இடங்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) வரை நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தலான இது 27 உறுப்பு நாடுகளில் நடைபெற்றது. இந்தத் தோ்தலுடன், சில உறுப்பு நாடுகளில் அந்த நாடுகளின் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களும் நடைபெற்றன. பெல்ஜியத்தில் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல், பல்கேரியாவில் நடாளுமன்றத் தோ்தல், சைபீரியா, ஜொ்மனி, ஹங்கேரி, அயா்லாந்து, […]

கடல் நடுவில் 3 நாட்கள் தியானம் செய்கிறார் பிரதமர் மோடி

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்களுக்கு தியானம் செய்கிறார். கன்னியாகுமரி, நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதிக்கட்டமான 7-வது கட்ட தேர்தல் 1-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. […]

வடக்கில் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறார் ரணில்.

நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) காணி உறுதிகளை வழங்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற் கட்டமாக 372 பயனாளிகளுக்கான இன்று ரணில் விக்ரமசிங்கவால் காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வானது இன்று (24) யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது. ரணில் நடவடிக்கை வடக்கு மாகாண […]

ஜூலை 4-இல் பிரிட்டன் பொதுத் தோ்தல்

பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் புதன்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை மன்னா் ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தோ்தல் நடைபெறும்’ என்றாா்.

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன. பாலஸ்தீன பிரச்னையில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும், 7 மாத கால காஸா போரில் இஸ்ரேல் நாளுக்கு நாள் சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டு நாா்வே பிரதமா் ஜோனஸ் காா்ஸ்டோா் கூறியதாவது: பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப்படாதவரை மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படாது. எனவே அந்தப் பகுதியை […]

கார்கிவ் நகரை கைப்பற்ற எண்ணமில்லை – புதின் திட்டவட்டம்

ரஷிய பிரதமர் விளாதிமீர் புதின் வெள்ளிக்கிழமை தற்போதைக்கு கார்கிவ் நகரை கைப்பற்றும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் ரஷிய நாட்டின் பெல்கோரோட் பிராந்தியத்தின் மீது கார்கிவ்வில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நகரை பாதுகாப்பு மண்டலமாக ரஷிய படைகள் நிறுவியுள்ளன. சீனா பயணத்தின் முடிவில் ஹார்பின் நகரில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விளாதிமீர் புதினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.கடுமையாக தாக்கப்பட்ட கார்கிவ் நகரை வியாழக்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலென்ஸ்கி […]