அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பாங்க.

லக்னோ: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள்; கடவுள் ராமர் மீண்டும் கூடாரத்துக்குதான் போய்விடுவார் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தங்கத்தை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும்; 2 எருமைகள் வைத்திருந்தால் ஒரு எருமையை முஸ்லிம்களுக்கு பிரித்து கொடுக்கும்; […]
அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘இடைக்கால உத்தரவை (இடைக்கால ஜாமீன் மீது) வெள்ளிக்கிழமையன்று அறிவிப்போம். அன்றைய தினம் கைதுக்கு எதிராக தாக்கலான முக்கிய விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று […]
பா.ஜ., 275 இடங்களில் வெற்றி பெறும் ஆனால், மோடி பிரதமர் ஆக வாய்ப்பில்லை

இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால், கடந்த முறை போல் மெஜாரிட்டிக்கும் கூடுதலான இடங்கள் கிடைக்காது. இந்த முறை 275 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டுமே, தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், மோடி தான் பிரதமர் என்று உறுதியாக கூற முடியாது. பா.ஜ., – எம்.பி.,க்கள் ஒன்றாக கூடி, பெரும்பான்மையாக யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ, […]
இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு

இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பு, 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 தொகுதிகளில் இன்று(19) நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் மொத்தமாகவுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 39 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் 950 […]
ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

கடந்த வாரம் தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் சில இலக்குகள் மீது இஸ்ரேல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.கடந்த வாரம் தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் சில இலக்குகள் மீது இஸ்ரேல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானுக்குள் ஒரு தளத்தைத் தாக்கியதாக ஏபிசி தெரிவித்தது. ஈராக் மற்றும் சிரியாவிலும் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24 மணி […]
ஈரானுக்கு பதிலடி நிச்சயம்!: இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி சூளுரை

ஜெருசலேம், ஏப். 16: தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையிலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து, தாக்குதலில் மிதமாகச் சேதமடைந்த நெவாடிம் விமான தளத்தில் ஹெர்ஸி ஹலேவி கூறியதாவது: இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. […]
இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி வான்வளி தாக்குதல்

ஈரான் இஸ்ரேலுக்கு தாக்குதல் எச்சரிக்கையினை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளதுடன் இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் ட்ரோன்கள் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் […]
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய ஞானசாரருக்கு 4 வருட சிறைத் தண்டனை

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குரகல புராதன பௌத்த மடாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட […]
‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

ராபா விவகாரம் குறித்த முரண், நட்பு நாடுகளுக்கு இடையேயான விரிசல்களில் மற்றுமொன்று எனத் தெரிவித்தவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். காஸாவில் போர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான மத்திய காஸாவுக்கு மக்களை இடம்பெயர செய்ய அறிவுறுத்தும் திட்டம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் பகுதிக்கும் மேற்பட்ட மக்கள் ராபாவின் தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ள நிலையில், போரில் இருந்து மக்கள் […]
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிyில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காசாவில் தொடரும் ஐந்து மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. முந்தைய வரைவுகளை வீட்டோ செய்த இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா இந்த வரைவில் வாக்களிக்கவில்லை. மற்ற 14 உறுப்பினர்களும் இஸ்லாமிய புனித மாதமான ரமழானுக்காக “உடனடியாக போர்நிறுத்தம் கோரும்” தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்தத் தீர்மானம், “நீடித்த, நிலையான போர்நிறுத்தத்திற்கு” இட்டுச் செல்லும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது மற்றும் ஒக்டோபர் 7 […]