Maatram

சம்பந்தன் இனி கூட்டமைப்பின் தலைவர் இல்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி பறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி, ஒற்றுமையை விரும்பும் மக்களின் வெற்றியென […]

‘இலங்கை மீள ஒரே வழி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே’: எஸ்.ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இதன்போது கருத்து தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர்-இலங்கை மிக மோசமான நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. இதிலிருந்து துரிதமாக மீண்டெழவில்லையென்றால், மிகப்பெரிய நெருக்கடியை மக்கள் சந்திப்பார்கள். இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, இலங்கை முன்னேற வேண்டுமெனில் பொருளாதார வளர்ச்சி மட்டும்தான் ஒரே தீர்வு. அதற்கு, இலங்கை உள்ளக- இனப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது சிங்கள மக்களும் இனப்பிரச்சினை தீர்விற்கான சாதகமான அப்பிராயத்திற்கு வருகிறார்கள். இலங்கை […]

ஈரானிய முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் தூக்கிலிடப்பட்டார்.

பிரிட்டன்-ஈரானிய இரட்டை நாட்டவரான அலிரேசா அக்பரி, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு உளவு பார்த்ததன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டார் என்பதை நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை காலை உறுதிப்படுத்தியது. உளவுத்துறையை அனுப்புவதன் மூலம் நாட்டின் உள் மற்றும் வெளி பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்ததற்காக அக்பரிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரிட்டிஷ் உளவு சேவையின் நடவடிக்கைகள் குற்றவாளியின் மதிப்பையும், அவர் அணுகுவதற்கான முக்கியத்துவத்தையும், எதிரிகள் அவர் மீது வைத்திருக்கும் […]

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து – புதிய வியூகத்துடன் களமிறங்கத் தயார்!

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. […]

உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய புதிய தொகுப்பை இரண்டாவதாக மற்றுமோர் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர். பைடன் துணை அதிபராக இருந்த பிறகு பயன்படுத்திய ஆவணங்களின் முதல் தொகுப்பு, வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. ரகசிய கோப்புகளைத் தவறாகக் கையாண்டதாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படவுள்ளது. பைடன் […]

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

இலங்கையில் 2019, ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (12/01/2023) வழங்கியுள்ளது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தவிர்ப்பதற்குத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உயர்நீதிமன்றம் வழங்கியது. இதன்படி, 2019ஆம் […]

முறிந்தது தேர்தல் கூட்டு: கட்சி தலைவர்களின் கருத்துக்கள்!

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைவுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு இரு தசாப்தங்களின் பின்னர் முறிவடைந்துள்ளது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தில் தனித்தே போட்டியிடுவதென பெரும்பான்மையோர் சிபார்சு செய்து ஆதரவினை வெளியிட்டிருந்த நிலையில் அதுதொடர்பில் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான கூட்டமொன்று […]

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இனப் பிரச்சினை தீர்வு குறித்து தமிழக் கட்சிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், அவரது பயணம் இந்த மாதமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருதரப்பு பேச்சுக்களுக்காக இந்த மாதம் இந்திய வெளிவவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த உத்தியோகபூர்வ […]

ஆங் சான் சூகிக்கு இராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை!

மியான்மரில் பெப்ரவரி 2021 இல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து, இராணுவ ஆட்சி அமலானது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூ கி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற நீதிமன்ற அமர்வில், சூ கி, மியான்மரின் தலைவராக இருந்தபோது ஹெலிகாகொப்டரை குத்தகைக்கு எடுத்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பான குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளித்தது.இத்துடன் அவருக்கு எதிரான கடைசி வழக்குகளை முடித்து வைத்தது.இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில் உள்ள நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை […]

சுமந்திரன் கூறியது தவறு; புதிய கட்சிகளை இணைப்பதில்லையென முடிவெடுக்கப்படவில்லை: கே.வி.தவராசா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழரசு கட்சியின் கொழுப்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மறுத்துள்ளார். தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் நடந்த […]