கிளிநொச்சி மதுபானசாலை விவகாரம்; சிக்கினார் விக்னேஸ்வரன்!

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக்கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ரணில் அரசில் பல தமிழ் எம்.பிக்களும் மதுபானச்சாலை உரிமம் பெற்றதாக தகவல் வெளியானது. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி. ரெலோ உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டு […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து, டிக்ளேர் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 2 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது. இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தனது 13வது இன்னிங்ஸில் ஐந்தாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களை பெற்றிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார். டினேஸ் சந்திமால் 116 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். நியூசிலாந்து […]
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மரணம் ; யார் இந்த ஹசன் நஸ்ரல்லா

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்த போவதில்லை என்று ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய சில நிமிடங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்திருக்கிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? எதற்காக இஸ்ரேல், இவரை கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணத்தை நாம் இங்கு பார்ப்போம். […]
ரஷியா – வட கொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்

வட கொரியா சென்றுள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாடுகளில் எந்த நாடு தாக்கப்பட்டாலும், இன்னொரு நாடு உதவுவதற்கு உறுதியளிக்கும் அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது மேற்கத்திய நாடுகளுக்குக் கவலையளிக்கக் கூடியது என்று கருதப்படுகிறது. இது குறித்து தலைநகா் பியோங்கியாங்கில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் விளாதிமீா் புதின் கூறியதாவது: ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய […]
ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல்: தீவிர வலதுசாரி கட்சிகள் முன்னேற்றம்

720 இடங்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) வரை நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தலான இது 27 உறுப்பு நாடுகளில் நடைபெற்றது. இந்தத் தோ்தலுடன், சில உறுப்பு நாடுகளில் அந்த நாடுகளின் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களும் நடைபெற்றன. பெல்ஜியத்தில் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல், பல்கேரியாவில் நடாளுமன்றத் தோ்தல், சைபீரியா, ஜொ்மனி, ஹங்கேரி, அயா்லாந்து, […]
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்: பிரதமர் தெரிவிப்பு

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார். செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும், இதனை அரசாங்கமும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பொறுப்பற்ற வகையில் தெரிவிக்கப்படும் கருத்துகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படாத விடங்களை முன்வைத்து, நாட்டில் குழப்பமான நிலையை தோற்றுவிக்கின்றமையானது, ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
கடல் நடுவில் 3 நாட்கள் தியானம் செய்கிறார் பிரதமர் மோடி

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்களுக்கு தியானம் செய்கிறார். கன்னியாகுமரி, நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதிக்கட்டமான 7-வது கட்ட தேர்தல் 1-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. […]
தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள்

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள்.அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு.அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் […]
இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத் அணி

நடப்பு ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை மைதானத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். […]
வடக்கில் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறார் ரணில்.

நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) காணி உறுதிகளை வழங்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற் கட்டமாக 372 பயனாளிகளுக்கான இன்று ரணில் விக்ரமசிங்கவால் காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வானது இன்று (24) யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது. ரணில் நடவடிக்கை வடக்கு மாகாண […]