பாகிஸ்தான் முன் நாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை!

நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார். இந்த வழக்கின் பின்னணி என்ன? மார்ச் 2022-ல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் உடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடக்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாத்திற்கு அனுப்பி வைத்தார். […]
ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் – இந்திய கடற்படை விரைவு

ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, “அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி […]
மீண்டும் கட்சி தாவுகிறாரா பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் ?

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் திட்டமிட்டபடி சரியாக சென்று, எல்லாமே கச்சிதமாக அமைந்து விட்டால், வரும் … இந்தியா” கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணைய நிதிஷ் குமார் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார் கடந்த காலங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார் என்பது குறித்து பார்க்கலாம். பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் […]
காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டனர்

திங்கட்கிழமை தெற்கு காசாவில் இடம் பெற்ற மோதலில் 24 படை வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது காசாவில் போர் மூண்டதற்க்கு பின்னர் ஒரே நாளில் அதிகபட்சமான வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும். பயங்கரவாதிகளின் கட்டுமானங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுத்த தாங்கி ஒன்றின் மீது நடாத்தப்பட்ட சுPபு தாக்குதலில் 21 வீரர்கள் பலியானதாகவும் இரண்டாவது சம்பவத்தில் கட்டிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய […]
சகல தமிழ்த் தேசியக்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரிதகதியில் முன்னெடுக்கவுள்ளேன்

2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும் எனவே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ் கட்சிகளும் தம் காட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன் இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் […]
பக்தியா, பகல் வேடமா?; ‘வதந்தி பரப்பும் பா.ஜ.க மீது பாய்ந்த ஸ்டாலின்.

தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் “அயோத்தி அரசியலை, கோதண்ட ராமர் கோயிலில் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?” என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். “திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது” என்று கூறி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார். […]
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் முக்கிய உளவுத்துறை தளபதி பலி

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிரியாவுக்கான ஈரானிய புரட்சிகரக் காவலர் படையின் உளவுத் தலைவரும் மற்ற நான்கு காவலர் உறுப்பினர்களும் சனிக்கிழமை கொல்லப்பட்டனர் என்று ஈரான் கூறியது. 2011 முதல், சிரியா ஒரு இரத்தக்களரி மோதலைச் சந்தித்துள்ளது. இதில் அரை மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது, ஆனால் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிக்கும் […]
விராட் கோலியின் சதத்துடன இந்திய அணிக்கு நான்காவது வெற்றி

புனேவில் நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. பதுங்கிப் பாய்வதுபோல இருந்தது வங்கதேசத்தின் ஆட்டம். முதல் ஐந்து ஓவர்களில் வெறும் பத்தே ரன்கள். அடுத்த 5 ஓவர்களில் 53 ரன்கள். வங்கதேசத்தின் அதிரடி தொடக்கம் இந்தியாவுக்கு சற்று அச்சுறுத்தலாக அமைந்தது. தன்சித் ஹஸன் 41 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார். ஹர்திக் பாண்டியா 3 […]
பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (18) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப […]
இஸ்ரேல் விதித்த கெடு முடிந்தது – அடுத்தது என்ன? திகிலில் உறைந்துள்ள காசா மக்கள்

கடந்த 7 அக்டோபர் 2023 அன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்தில் ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் அதே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நாட்டிற்குள்ளும் ஊடுறுவி தாக்குதல் நடத்தினர். இதில் 1,300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 150 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்ததுடன், பலரை காசாவுக்குக் கடத்திச் சென்றனர். ஹமாஸ் ஆயுதக் குழுவின் தாக்குதல் […]