இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!

தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம் என ஐ.நா.மனித உரிமை பேரவையின் 52 ஆவது அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவித்துள்ளார். அவரது உரையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அறிக்கையை இங்கு சமர்ப்பிக்கிறேன். சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது. […]
இலங்கை இனி ஒரு வங்குரோத்து நாடு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இலங்கைக்கான கடன் வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்தார். இலங்கை தனது கடனை மறுசீரமைப்பதற்கும், சாதாரண பரிவர்த்தனைகளை மீண்டும் தொடங்குவதற்கும் இலங்கைக்கு திறன் உள்ளது என்பதற்கான சர்வதேச சமூகத்தின் உத்தரவாதமாக இந்த கடன் வசதி உதவுகிறது என்றார். அந்தியச் செலவாணியின் கையிருப்பு அதிகரிக்க படிப்படியாக இறக்குமதி கையிருப்புக்களை நீக்க முடியுமென்றார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் […]
ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா?

பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க, பெரும்பணம் கொடுத்து அவரை மௌனமாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
இம்ரான் கான் பிணையில் வெளிவர முடியாத இரண்டு பிடியாணைகள்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பிணையில் வெளிவர முடியாத இரண்டு கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டன. பெண் நீதிபதியை அச்சுறுத்தியது உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகததை தொடர்ந்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 70 வயதான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு வஜிராபாத்தில் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் தப்பித்தார். தற்போது காயங்களில் இருந்து மீண்டு வருகிறார். அத்துடன் பல வழக்குகளில் விசாரணையைத் தவிர்த்துவிட்டார். இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் […]
ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தேர்தலை நடத்துவதற்கு சாதகமான தினமாக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு […]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இல்லை ! – எரிக் சோல்ஹிம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹிம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தன. இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரின் ஒரு பகுதியாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது […]
திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக ஆட்சி: மேகாலயத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சி

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திரிபுராவில் பாஜக – திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இங்கு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதேபோல், நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) -பாஜக கூட்டணி வெற்றி பெற்று, தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. மேகாலயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை […]
24 மணிநேரத்துக்குள் அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்றைய தினம் உயரழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் காவல்துறைமா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது. கொம்பனித்தெரு காவல்துறை பிரிவிற்குட்பட்ட யூனியன் பிளேஸ் […]
அதானி விஷயத்தில் மோதியின் மௌனம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை மீதான விவாதத்தின் போது, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோதியின் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கௌதம் அதானியின் வெற்றிக்கு முக்கிய காரணம், பிரதமர் மோதியிடம் அவருக்கு இருக்கும் நெருக்கம்தான் என்று ராகுல் காந்தி கூறினார். பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பதிவேட்டில் இருந்து ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்காரணமாக ராகுல் காந்தியின் […]
நூற்றாண்டின் பேரழிவு: இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் உயிரிழப்பு!

நூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், மீட்பு பணிகள் தொடருவதால் பேரழிவின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களைத் தேடி வருகின்றனர், ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணிநேரம் ஆகியுள்ளதால் அதன் நம்பிக்கை குறைந்து வருகின்றது. உறைபனி நிலைமைகள் ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன, அவர்கள் இப்போது தங்குமிடம், […]