இந்தியா vs ஆஸ்திரேலியா: அஷ்வின் வீழ்த்திய 450 விக்கெட்டுகள் – புது சாதனை

இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் இன்றைய தினம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார். இன்றைய தினம் நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளை இழக்கும் வரை அஷ்வினுக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. முதல் பத்து ஓவர்களில் […]
மோடி ஆட்சியில் உலக பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்து கெளதம் அதானி, 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்;

2014-இல் உலக பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்து கெளதம் அதானி, மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்; 2014-க்குப் பிறகு அவரது இந்த வளர்ச்சியில் மாய வித்தை நடந்திருக்கிறது என்றார் ராகுல் காந்தி. மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல வெளிநாட்டு ஒப்பந்தங்களை கெளதம் அதானி பெற பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ததாகக் குற்றம்சாட்டினார். அவர் பேசியது: நீங்கள் […]
மாணவர் பேரணியை குழப்ப அரச புலனாய்வு துறையினர் முயற்சி!

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுருப்பதாக தெரியவந்துள்ளது. புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரை வைத்து இந்த சதித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். பேரணியில் வருகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கு […]
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் […]
அதிமுக உள்சண்டை -பாஜக சமரசம்: இபிஎஸ் – ஓபிஎஸ் மறுப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வத்தை தனித்தனியாக பாஜக தலைவா்கள் சந்தித்து வலியுறுத்தினா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வத்தை தனித்தனியாக பாஜக தலைவா்கள் சந்தித்து வலியுறுத்தினா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளனா். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளா் […]
அதானியால் எல்ஐசி(LIC), எஸ்பிஐ(SPI)க்கு ரூ.78,000 கோடி இழப்பு: நிதி அமைச்சர் அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தன. அதானி குழுமத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ உட்பட பொதுத் துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அந்நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விசாரணை அமைப்புகளும் ஏன் அமைதி காக்கின்றன” என்று காங்கிரஸ் […]
அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நேர் செட்களில் (6-3, 7-6, 7-6) தோற்கடித்தார். ஜோகோவிச்சிற்கு இது பத்தாவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம். ஒட்டுமொத்தமாக அவரது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். 24 வயது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை சுதாகரிக்க அவகாசம் வழங்காமல் ஜோகோவிச் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிகளில் தோல்வியடையாத வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த வெற்றி நோவாக்கை […]
இறுதிச் சுற்றில் நுழைந்து சானியா-போபண்ணா சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கலப்பு இரட்டையா் இறுதிச் சுற்றில் நுழைந்து சாதனை படைத்துள்ளனா் தரவரிசையில் இல்லாத சானியா மிா்ஸா-ரோஹன் போபண்ணா இணை. இதன் மூலம் 7-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பு சானியாவுக்கு கிட்டியுள்ளது. இந்தியான் நட்சத்திர வீராங்கனையும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான சானியா மிா்ஸா, ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாா். இந்நிலையில் மகளிா் இரட்டையா் பிரிவில் தோல்வியுற்ற நிலையில், கலப்பு இரட்டையா் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து அசத்தலாக ஆடி வருகிறாா். தரவரிசைப் பட்டியலில் […]
சிறுத்தை-2 (Leopard-2) ரக யுத்த டாங்கிகளை உக்கிரைனுக்கு வழங்க ஜெர்மனி சம்மதித்தது

நேட்டோ நட்பு நாடுகளின் தொடர்ச்சியான இராஜதந்திர அழுத்தத்திற்குப் பின்னர் உக்ரைனுக்கு தன் வசமுள்ள படைக்கலன் களில் இருந்து 14 சிறுத்தை-2 (Leopard -2) ரக யுத்த டாங்கிகளை உக்கிரைனுக்கு அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்தது. ஆயத ஏற்றுமதியில் மிகவும் கடினமான கொள்கையை கொண்டிருக்கும் ஜெர்மனி நீண்ட இழுபறிக்குப் பின்னர் சம்மதித்திருப்பதை சரியான முடிவு என உக்ரையின் வரவேற்றுள்ளது. மேலும் போலந்து போன்ற ஏனய நட்பு நாடுகளுக்கு ஜெர்மனி வழங்கியிருந்த சிறுத்தை 2 ரக டாங்கிகளை மீழ் ஏற்றுமதி செய்வற்கு […]
இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்து

எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தின் முக்கால் பகுதி நேரம் வரை விரைந்து சென்று கொண்டிருந்த இந்திய அணி கடைசியில் தோற்றுப் போனதால் அதன் ஹாக்கி உலகக் கோப்பை கனவு தகர்ந்து போனது. ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட், சடன் டெத் முறையில் இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் இரு அணிகளும் […]