Maatram

தமிழ் பொது வேட்பாளர் – நிதானம் அவசியம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்து வது தொடர்பில் சிவில் சமூகக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் பேசி வருகின்றன. எனினும், இது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தி யில் இதுவரையில் உத்தியோகபூர்வமான இணக்கப்பாடு எட்டப்படவில்லை.இதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் ‘மக்கள் மனு’ – வடக்கு, கிழக்கு சிவில் சமூகக் குழுவானது மக்கள் மத்தியில் சந்திப்பு களை நடத்திவருகின்றது. அந்த வகையில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை மக்கள் எண்ணக்கருவாக மாற்றும் விடயத்துக்கு ‘மக்கள் […]

PL 2024 – அந்நிய மண்ணில் சிஎஸ்கே பெற்ற முதல் வெற்றி.

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களே சோ்த்தது. தொடா் தோல்விகளில் இருந்து மீண்டு இரு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த மும்பை, மீண்டும் தோல்வி கண்டுள்ளது. இரு தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்த […]

இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி வான்வளி தாக்குதல்

ஈரான் இஸ்ரேலுக்கு தாக்குதல் எச்சரிக்கையினை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளதுடன் இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் ட்ரோன்கள் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் […]

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய ஞானசாரருக்கு 4 வருட சிறைத் தண்டனை

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குரகல புராதன பௌத்த மடாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட […]

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

ராபா விவகாரம் குறித்த முரண், நட்பு நாடுகளுக்கு இடையேயான விரிசல்களில் மற்றுமொன்று எனத் தெரிவித்தவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். காஸாவில் போர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான மத்திய காஸாவுக்கு மக்களை இடம்பெயர செய்ய அறிவுறுத்தும் திட்டம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் பகுதிக்கும் மேற்பட்ட மக்கள் ராபாவின் தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ள நிலையில், போரில் இருந்து மக்கள் […]

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம்  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிyில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காசாவில் தொடரும் ஐந்து மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. முந்தைய வரைவுகளை வீட்டோ செய்த இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா இந்த வரைவில் வாக்களிக்கவில்லை. மற்ற 14 உறுப்பினர்களும் இஸ்லாமிய புனித மாதமான ரமழானுக்காக “உடனடியாக போர்நிறுத்தம் கோரும்” தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்தத் தீர்மானம், “நீடித்த, நிலையான போர்நிறுத்தத்திற்கு” இட்டுச் செல்லும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது மற்றும் ஒக்டோபர் 7 […]

மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

மதுரை பாஜக பிரமுகர் சசிகுமார் இல்ல திருமண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் நயினார் நகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவது குறித்தெல்லாம் நான் விசாரணை செய்யவில்லை.எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. தமிழகத்தில் திமுக, பாஜக என களம் மாறியுள்ளதாக எல்லோரது கனவு. அது நடக்குமா என்றால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அனைத்து […]

5-ஆவது முறையாக ரஷிய அதிபராகிறாா் புதின்

ரஷிய அதிபராக புதின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா். இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷியாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு அதிபா் புதினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது. புதினை தீவிரமாக எதிா்த்து […]

35 சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையால் கைது

மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது. கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை […]

சிஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அடி: மற்றுமொரு முக்கிய வீரர் காயம்!

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிஸ்கே அணியின் மற்றுமொரு வீரர் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது சிஸ்கே அணியின் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண விளையாடாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது தொடை தசையில் காயம் அடைந்த நட்சத்திர இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண குறைந்தது நான்கைந்து வாரங்களுக்கு விளையாடாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் […]