Skip to main content

Maatram

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் ஸ்ரீதரனுக்கு எதிராக முறைப்பாடு

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இந்த முறைபாட்டை பதிவு செய்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராக கடமை புரிந்த எஸ்.ஸ்ரீதரன், அரசியலில் பிரவேசித்து, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் திடீரென கோடிக்கணக்கில் எவ்வாறு சொத்துக்களை சம்பாதித்தார் என்பது தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரி, அவருக்கு எதிராக இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சொத்துக்களை சம்பாதித்த முறை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.