இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி!

பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரண 32 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்தநிலையில், 165 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணிசார்பில் அதிகபடியாக, சரித் அசலங்க 62 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், பங்களாதேஸ் அணியின் ஷகிப் அல் ஹசன் 29 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நேபாளத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி அபார வெற்றி

இந்த போட்டியில் பாகிஸ்தான் 238 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுகளை இழந்து 342 ஓட்டங்களை பெற்றது. பெறுமதிமிக்க இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம், 109 பந்துகளில் 10 – பௌண்டரிகளுடன் தனது 19வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அணித் தலைவருக்கு ஆதரவை வழங்கிய இப்திகா அகமது 67 பந்துகளில் சதம் விளாசினார், பாபர் […]
இம்ரான்கானின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை நீடிப்பு
சிதறுண்ட தமிழர் தரப்பு – நுட்மாக ரணில் வகுக்கும் வியூகம்

வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் உள்ள காணிகளை கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறார். அதுவும் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முதல் நாள் இந்த உத்தரவை ரணில் பிறப்பித்திருக்கிறார். தமிழர் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கல் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவங்களில் அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு மாறாகவும், சட்டங்களுக்கு அமைவானது என்று […]
தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கு எதிராக தனித்து நின்றுபோராடிய கஜேந்திரன் எம்.பி!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலவந்தமாக தூக்கி ஏற்றி பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் தனிநபராக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் தனிநபராக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தையிட்டியில் […]
திருகோணமலை புத்தர் சிலைக்கு பிரதிஷ்டம்,கட்சி வேறுபாடற்ற போராட்டமே உடனடித்தேவை: ந.ஸ்ரீகாந்தா

தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை, ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பித்து வைக்கவும், அதனை சாட்டாக வைத்து தமிழ்ப் பிரதேசமான வடகிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்கு முறையை மேலும் இறுக்கிக் கொள்ளும் நோக்த்துடனேணே திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ந.ஸ்ரீகாந்தா சந்தேகம் வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள, நான்கு அடி உயரமான புத்தர் சிலையுடன், இலங்கைக்கு வந்துள்ள 50 பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் […]
இம்ரானை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று வியாழக்கிழமை அறிவித்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கானை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, அவரது கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை, தலைமை நீதிபதி […]
‘தற்கொலை ட்ரோன்கள்’ மூலம் மீண்டும் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா .

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. புதிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு, ரஷ்யா தொடங்கியுள்ள தாக்குதலால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வில் இரவு முழுவதும் வெடிசப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது எனக் கூறும் நகர மேயர், ரஷ்யாவின் காமிகேஸ் வகை பெரிய ட்ரோன் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் தெற்கு ஓடேசா பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், தங்களது […]
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்டுதல்

இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் நடத்தும் பேச்சுக்கள் சற்று முக்கியத்துவம் பெறுகின்றன. ரணில் விக்ரமசிங்க தனது லண்டன் சந்திப்புகள் மற்றும் பயணத்திற்கு பின்னர் நகர்த்தும் ஒரு முக்கியமான சந்திப்பு இதுவாகும். எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் நடத்த திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு முன்னோடியாக இந்த நகர்வு இடம் பெறுவதாகவும் கருதப்படுகின்றது. […]
சவூதி அணியில் லயோனல் மெஸ்ஸி?

ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, சவூதி அரேபியாவை அடிப்படையாகக் கொண்ட கிளப் ஒன்றில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மெஸ்ஸிக்கு சுமாா் ரூ.4,796 கோடி வரை கொடுப்பதற்கு அந்த கிளப் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் வா்த்தகத்தை பிரதானமாகக் கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகள், சமீப காலத்தில் விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது இதற்கு உதாரணம். கால்பந்து, கிரிக்கெட்டில் கிளப்புகள் […]