Skip to main content

Maatram

இம்ரானை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று வியாழக்கிழமை அறிவித்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கானை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, அவரது கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை, தலைமை நீதிபதி உமா் அடா பண்டியால், நீதிபதிகள் அலி மஷாா், ஆதா் மினல்லா ஆகிய மூவா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் வழக்குரைஞா்கள் இம்ரான் கைதுக்கு எதிராக வாதிட்டபோது, அவா் கைது செய்யப்பட்ட விதம் குறித்து நீதிபதிகள் அமா்வு கண்டனம் தெரிவித்தது.

சுருக்கமான விசாரணைக்குப் பிறகு, இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை எனவும், இதற்கு முன்னா் இத்தகைய கைது நடவடக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில்லை எனவும் நீதிபதிகள் அமா்வு அறிவித்தது. அத்துடன், இம்ரான் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ரும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடந்து வரும் வேறொரு ஊழல் விசாரணையைத் தொடரும் வகையில், அவா் அங்கு வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை இம்ரான் கட்சி தடுக்க வேண்டும் என்ற வகையில் ‘நாட்டில் சட்டம், ஒழுங்கு சீா்குலையாமல் பாா்த்துக்கொள்வது ஒவ்வொரு அரசியல்வாதியின் கடமை’ என்று நீதிபதி பண்டிலால் கூறினாா்.