Maatram

மணிப்பூரில் கலவரம்: ராணுவம் குவிப்பு; ஊரடங்கு அமல் – 9,000 போ் மீட்பு

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தினருக்கும், மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு தீவைக்கப்பட்டது. வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, மணிப்பூரில் ராணுவத்தினா் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை சுமாா் 9,000 போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வா் பிரேன் […]

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்- நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மல்லாகம் நீதிமன்றம் விதித்துள்ள கட்டளையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.அத்தோடு, ஒவ்வொருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும் அல்லது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியும். எனினும் குறித்த உரிமைகளை அனுபவிக்கும் போது விகாரையின் முகப்பிலோ அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும்

தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், […]

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் […]

ஒரு லட்சம்இலங்கை குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி.

சீனாவில் இலங்கையின் குரங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வாக பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிடுகிறது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டது.இக்கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளை […]

ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் .

மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான ஹிஜாப்பை கட்டாயம் அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும். இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய மஹ்சா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு காவல்துறை தாக்கியதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, நாடு முழுதும் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. நாளுக்குநாள் அதிகரித்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், ஆடை கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் […]

இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய நடத்தையை கண்காணிக்கும் அதேவேளையில், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் என்று Economic Times தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் தேவேந்திர முனையை […]

இறுதி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை – ஒரு பந்து எஞ்சிய நிலையில் வெற்றியீட்டிய நியூஸி.

இலங்கைக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.  நியூஸிலாந்து வெற்றிபெற கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை இலங்கை அணியினர் வீழ்த்தி கடும் சவால் விடுத்தனர்.  குவீன்ஸ்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணிக்கு குசல் மென்டிஸ் – பெத்தும் நிஸ்ஸங்க ஜோடி 9.3 ஓவர்களில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.  பெத்தும் நிஸ்ஸங்க […]

அமைச்சுப் பதவிகளுக்குக்கு முட்டி மோதும் பொதுஜன பெரமுன: கட்சிதாவ காத்திருக்கும் ராஜித

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எஞ்சிய பத்து அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் பலர் களத்தில் குதித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் சிலரை உருவியெடுத்து அமைச்சு பதவிவழங்க ரணில் தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, அமைச்சரவை முப்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் இருபது பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில், புதிதாக பத்து அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பத்து அமைச்சுப் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் […]

சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். […]