Maatram

மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

மதுரை பாஜக பிரமுகர் சசிகுமார் இல்ல திருமண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் நயினார் நகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவது குறித்தெல்லாம் நான் விசாரணை செய்யவில்லை.எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. தமிழகத்தில் திமுக, பாஜக என களம் மாறியுள்ளதாக எல்லோரது கனவு. அது நடக்குமா என்றால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அனைத்து […]

5-ஆவது முறையாக ரஷிய அதிபராகிறாா் புதின்

ரஷிய அதிபராக புதின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா். இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷியாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு அதிபா் புதினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது. புதினை தீவிரமாக எதிா்த்து […]

35 சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையால் கைது

மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது. கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை […]

உலகளாவிய அணு ஆயுதப் போா்: நேட்டோவுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு அளவுக்கு அதிகமாகத் தலையிட்டால் அது உலகளாவிய அணு ஆயுதப் போா் வெடிப்பதற்குக் காரணமாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இது குறித்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது: உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் பங்கேற்பு வரம்புக்குள்பட்டதாக இருக்கவேண்டும். அதனை மீறி அந்தப் போரில் அந்நாடுகள் தலையிடுவது, உலகளாவிய அணு ஆயுதப் போா் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகள் மீது […]

போரின் போக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக மாறுகிறதா?

ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி. இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் […]

இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி முறையே 445 ரன்கள் மற்றும் 430 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி 430 ரன்களில் டிக்ளேர் செய்ய இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது […]

ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.

கடந்த ஒரு தசாப்தமாக ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளராக செயல்பட்ட 47 வயதான அலெக்ஸி நவால்னி; பூமியின் குளிர் மிக்க வட துருவப் பகுதியில் அமைந்துள்ள ஆர்டிக் தண்டனை காலனி சிறையில் மரணம் அடைந்துள்ளதாக டாஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அலக்ஸே நவால்னி ரஷ்ய அதிபர் புதினின் தீவிர விமர்சகராகப் பார்க்கப்படுகிறார். ரஷ்ய அதிகார மையத்தின் ஊழல்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அம்பலப்படுத்தி வருகிறார். இவரது விசாரணை வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. […]

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு நடத்த தடை ; நீதிமன்றம் உத்தரவு!

இடைக்காலத் தடை இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று(15) இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட […]

விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா – பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர். காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை […]

புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு

ODI வடிவத்தில் இலங்கைக்காக 200 ஓட்டங்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையை பதும் நிசங்க (Pathum Nissanka) படைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க, அந்நாட்டு கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்தார். முதல் இரட்டை சதம் – புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான் உள்ளிட்டோர் தோட்ட உச்சத்தை கடந்து நிசங்க புதிய சாதனையை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் […]