Skip to main content

Maatram

யாழில், ஆறு ஆசனங்களுக்கு 396 பேர் போட்டி !

யாழ் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும்இ 21 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் (23)மற்றும் சுயேட்சை குழுக்களால் (23) கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 396 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.