Maatram

உலக கோப்பை கிரிக்கெட்: 8 வது முறை பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 முறை வீழ்த்தியது இந்தியா. இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் ‘டாஸ்’ […]

உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் இரத்து : திடீரென பறந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், பல உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு திடீரென நாடு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அவர் திடீரென நாடு திரும்பியது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, உடன் இந்திய வெளியுறவு அமைச்சர், முன்னாள் அதிபரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டு திடீரென நாடு திரும்பியதாக குறித்த […]

நியூசிலாந்திடம் நெதர்லாந்து ‘சரண்டர்’: ஐந்து விக்கெட் வீழ்த்தினார் சான்ட்னர்

உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தின் சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கிய நெதர்லாந்து அணி 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவில், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் 13வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தின் ராஜிவ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.  முதல் மூன்று ஓவரை ‘மெய்டனாக’ வீசிய நெதர்லாந்து பவுலர்கள் துவக்கத்தில் நெருக்கடி தந்தனர். பின் எழுச்சி […]

முழுமையான முற்றுகைக்குள் காசா – இஸ்ரேல் அறிவிப்பு.

காசா பிரதேசத்தை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேலிய பாதுகாப்ப அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர், உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் வினயோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின் இவ் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவ் அத்யாவசியப் பொருட்களின் பெரும்பகுதி இஸ்ரேல் ஊடாகவே காசாவிற்கு இதுவரை வழங்கப் பட்டு வந்தது. இதேவேளை ஒன்பது அமரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்பட்டுள்ளது. மேலும் பத்துக்கும் அதிகமான பிரித்தானியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இசைக் நிகழ்சி ஒன்றில் […]

நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் தயார் -இஸ்ரெலிய பிரதமர்

கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேலிய விமானப்படை நடாத்தும் தாக்குதல்களில் 400 க்கும் அதிகமான பாலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடாத்தும் தாக்குதல்களில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 100 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் […]

பா.ஜ. கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலக முடிவு செய்துள்ளது.புதிய கூட்டணியை…: சென்னையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை (செப்.25) நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம்ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே தொடா்ந்து கருத்து மோதல்கள் நடைபெற்று வந்த பரபரப்பான நிலையில், அதிமுக தலைமைக் கழக […]

சீக்கியர்களிடம் சிக்கியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்

ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் முதல்முறையாக கனடாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர் ​இந்தியாவில் மோடீ அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார். அப்போது ட்ரூடோ நான்கு சீக்கியர்களை அமைச்சரவையில் சேர்த்திருந்தார். கனடாவின் அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தது அதுவே முதல்முறை. தற்போது ​​பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான கனடாவின் உறவுகள் கடுமையான சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது. காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குப் […]

சந்திரயான்-3: விக்ரம் லாண்டரினின் உறக்கம் கலையவில்லை

இன்று (செப்டம்பர் 22 ஆம் தேதி) சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருந்தது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது.நிலாவில் சூரியன் உதித்தது. ஆனால் விக்ரம் லேண்டர் அதன் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை.நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொண்டது. ஆனால்இ சிக்னல் கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தொடர்புகொள்ள […]

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது […]

அமெரிக்க தூதுவருக்கு இலங்கையில் புதிய சிக்கல்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கு எதிராக தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பால் இன்று வெளிவிவகார அமைச்சில் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இந்த நாட்டின் அமெரிக்க தூதுவர், எமது உள்நாட்டு விவகாரங்களில் பாரிய அளவில் தலையீடு செய்கின்றார். அதேபோன்று இந்த நாட்டின் அரசியல் எவ்வாறு […]